வெள்ளி, 22 அக்டோபர், 2010

பிரதான செய்திகள்
மாளிகாவத்தையில் இராணுவத்தினர் தோண்டிய மர்மக்குழி : பின்னனி என்ன?
[ 2010-10-22 07:53:57 ] []
மாளிகாவத்தைப் பிரதேசத்தின் சேரிக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்ததாக கடந்த புதன்கிழமை மாலை இராணுவக் குழுவொன்று மர்மக்குழியொன்றைத் தோண்டி எதையோ புதைத்துவிட்டுச் சென்றுள்ளதால் அப்பகுதியெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. [மேலும்]
குமரன் பத்மநாதனுக்கு இராணுவ சல்யூட் மரியாதை
[ 2010-10-22 07:44:14 ]
விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரால் சல்யூட் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
பிந்திய செய்திகள்
பிரிட்டனில் புகலிட மனு நிராகரிக்கப்பட்டவர்களும் எம்.வி. சண் சீ கப்பலில் கனடா வந்துள்ளனர்: ஜேசன் கென்னி
[ 2010-10-22 15:54:10 ]
எம்.வி. சண் சீ கப்பலில் கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வருகை தந்தவர்களில் ஏற்கனவே பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மனு நிராகரிக்கப்பட்டவர்களும் அடங்கியுள்ளனர். இந்த தகவலை கனேடிய குடிவரவு துறை அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார். [மேலும்]
முன்னாள் பெண் புலிகள் 23 பேர் இன்று விடுதலை
[ 2010-10-22 14:21:18 ] []
முன்னாள் புலிகளாக இருந்து அரச படைகளிடம் சரணடைந்துள்ள ஆயிரம் பேரளவிலானோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக புனருத்தாபன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
செய்திகள்
கொழும்பை அண்மித்த பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:12.23 PM ] []
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை தொடக்கம் கல்கிஸை வரையான பிரதேசம் இன்று அதிகாலை முதல் நண்பகலை அண்மிக்கும் வரையில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வன்னியிலிருந்து உரிமை மடல்
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:01.41 PM ]
2009ம் ஆண்டு பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று ஒன்றரை வருடங்களை தாண்டி நின்றபோதும் அதற்கான சர்வதேச சமூகத்தாலோ, ஐக்கிய நாடுகள் சபையினராலோ விசாரணைகளும் ஆரம்பிக்கப்படாத நிலையிருந்து வந்தது. ஆனால் தற்போது ஐக்கிய நாடுகள் சபையே உத்தியோகபூர்வமாக ஒரு அமைப்பினை உருவாக்கி.... [மேலும்]
கிளிநொச்சி வங்கித் திறப்பு விழாவில் தமிழில் தேசிய கீதம் பாட இராணுவத்தினர் தடை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 01:49.19 PM ]
கிளிநொச்சி நகரில் வங்கித் திறப்பு விழாவில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடத்தெரியாதால் கனிஷ்ரா வித்தியாலய மாணவர்கள் தேசிய கீதம் இசைப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். [மேலும்]
விமான நிலையத்தில் வைத்து தமிழர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் கழுகுக்கண் பார்வை: அநாவசிய விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 01:15.59 PM ]
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகப் பயணிக்கும் தமிழர்களையும், சந்தேகத்துக்கிடமான முஸ்லிம்களையும் கண்காணிக்கவென பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசபையின் உதவி தவிசாளர் கைது
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 01:00.59 PM ]
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசபையின் உதவி தவிசாளர் வடிவேல் ரவிசந்திரன், குற்றப்புலனாய்வு துறையினரால் அவரது தனிப்பட்ட அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்]
மூதூரில் படகுப் பாதை விபத்து: கடலில் தத்தளித்த 22 பேர் கடற்படையால் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:52.50 PM ] []
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா - மூதூரை இணைக்கும் இறால்குழிப் பாதையின் உப்பாற்றின் மேலான பயணிகளுக்கான படகுப் பாதை பழுதடைந்த காரணத்தால் அதில் பயணித்தவர்கள் கடலில் பாய்ந்து தத்தளித்த சம்பவமொன்று இன்று மூதூரில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்றக் குழுவுக்கு இந்தியா அழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:39.52 PM ]
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்றை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்ய சபா மற்றும் லோக்சபா ஆகியவற்றிலிருந்து கூட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. [மேலும்]
மன்னிப்புக் கேட்க முடியாதென்கின்றார் கருணா…
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:28.23 PM ]
1990 ம் ஆண்டளவில் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தனக்கு மன்னிப்புக் கேட்க முடியாதென்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தத் தரப்புடனும் பேசத் தயார்: ஆர்.சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:22.31 PM ]
தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு என்பன குறித்து எந்தத் தரப்பு அழைப்பு விடுத்தாலும் அவர்களுடனான ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
வன்னியில் கைப்பற்றப்பட்ட தங்கம் மீண்டும் உரியவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:08.22 PM ]
வன்னியில் புலிகளிடமிருந்து அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியைக் கொண்ட தங்கம் அதன் உரிமையாளர்களான பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார். [மேலும்]
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றி வருவோருக்கு 10 வருட சிறைத்தண்டனை: கனடா தீர்மானம்.
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:03.25 PM ]
கனடாவுக்கு 50க்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றி வரும் நபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வகையிலான சட்டமூலமொன்றை அந்நாட்டு அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. [மேலும்]
களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலைய கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 08:10.18 AM ] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். [மேலும்]
இலங்கைக்கு அனைத்துலக தொலைத்தொடர்பு சங்க உறுப்புரிமை கைநழுவியது
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:47.52 AM ]
ஜெனீவாவில் அமைந்திருக்கும் அனைத்துலக தொலைத்தொடர்பு சங்கத்தின் உறுப்புரிமைக்கான போட்டியில் இலங்கை ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. பங்களாதேஷ் அதனைப் பெற்றுக்கொண்டுள்ளது. [மேலும்]
பொலிஸ் மா அதிபரின் பதவிக்கு ஆபத்து…?
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:40.50 AM ]
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய பொலிஸ் அதிகாரிகளை அடுத்த வருடம் சேவையிலிருந்து ஓய்வு பெறச் செய்யும் சுற்று நிருபமொன்றை பாதுகாப்பு அமைச்சு திடீரென விடுத்துள்ளது. [மேலும்]
நோர்வேயில் ரணில் - எரிக் சொல்ஹெய்ம் இன்று சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:36.05 AM ]
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை மற்றும் முன்னாள் நோர்வே பிரதமர் ஜ்வேல் மேக்னே பொண்டிவீக்கையும் ஆகியோரை சந்திக்கவுள்ளார். [மேலும்]

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அன்புள்ளங்களே நீங்கள் தேடும் உறவுகள் நண்பர்களை கண்டு பிடிக்கக உதவுகிறோம் இந்த இணையதி மூலமாக உங்கள் விபரங்களை பின்வரும் உதாரணம் போன்று எமக்கு எழுதி அனுப்புங்கள் .pungudutivu1@hotmail.com
புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சிவ-சந்திரபாலன் தற்போது ச்விச்சில வசித்து வருகிறார்.இவர் தன்னோடு கல்வி கற்ற வேலணை மத்திய கல்லூரி நண்பர்களை தேடி அறிவிக்கிறார். இவர்களை தெரிந்தவர்கள் அல்லது இவர்களோ நேரடியாகவோ தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் .(சிவ-சந்திரபாலன் pungudutivu1@hotmail.com 0041 76 317 91 00-)
ச.அமிர்தலிங்கம் -சரவணை .(முன்னாள் கணேச வித்தியாலய அதிபர்)--,செல்லத்தம்பி நவலக்ஸ்மி -சிவநேசன் சகோதர்கள் -நாரந்தனை --,வீரசிங்கம் தேவிகா -நாரந்தனை -,சிவகாமசுந்தரி-வேலணை.-நாகேஸ்வரன்-நாரந்தனை .-த.சோமசுந்தரம் வேலணை .பொன்.ஜெயபாலன்-வேலணை .
இராசாயகம் ஜனகன் -வேலணை .காசிப்பிள்ளை ஆசிரியர் வனஜா (அமரர் சுரேஷ்குமாரின் சகோதரி) வேலணை . நா.புஷ்பராணி--சரவணை,ஜெர்மனி -
நாகலிங்கம் புஷ்பராணி புங்குடுதீவு8.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அன்புத் தமிழ் உறவுகளே
இந்த இணையம் புங்குடுதீவை உறவாகக் கொண்ட எம் சொந்தங்கள் தங்களை அறிமுகம் செய்து உங்கள் உறவுகள் நண்பர்களை தேடி அறிந்துகொள்வதற்ற்காக உருவாக்கப்படுள்ளது. நன்றி
ஊரோடு உறவாட